பிரதமர் மோடியின் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த ஒய்.எஸ்.ஷர்மி ளா, மாநில துணை முதல்வர் பவன்கல் யாண் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்ச னம் செய்வது நகைப் புக்குரியது. ஆட்சி க்கு வந்த பிறகு பவன் கல்யாணின் உடை, பேச்சு மாறிவிட்டது. அனைத்து சமூகங்க ளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டிய நிலையில், பவன் கல்யாண் ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்படுவதுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். மற்ற மதத்தினரும் வாக்களித்ததால் தான் பவன் கல்யாண் வெற்றிபெற்று துணை முதல்வர் பதவியில் உள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.